Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீரன் அழகுமுத்து கோனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த வரவேண்டும்: ராஜாராம்

ஜுலை 03, 2019 11:48

சென்னை: வீரன் அழகுமுத்து கோன் குருபூஜையில் அனைத்து கட்சித் தலைவருகளும் கலந்து கொண்டு மாவீரனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கோகுல மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் செங்கம் கு.ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

ஜூலை 11ம் தேதி யாதவர் சமுதாயத்தின் அடையாளமாக கருதப்படும் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும். துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். 

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மாவீரனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். 

இந்த விழாவை ஒரு வீரத்திருநாளாக அனைத்து யாதவர் சமுதாய மக்களும்  கொண்டாட வேண்டும் என்று ராஜாராம் கூறினார்.

தலைப்புச்செய்திகள்